காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட எலும்புகூடு 2 மாதங்களுக்குள் இறந்தவருடையதாக இருக்கலாம்..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட எலும்புகூடு 2 மாதங்களுக்குள் இறந்தவருடையதாக இருக்கலாம்..

காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த மனித எழும்புக்கூடு இன்று புதன்கிழமை காலை மீட்கபட்டு உள்ளது. 

குறித்த எழும்புக்கூடானது கடந்த இரண்டு  மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம் எனவும் , அது 60 வயது மதிக்கதக்க ஆணினுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயூரதன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு