பொலிஸாரின் வாகனத்தை கடத்திய குடிகாரன் உட்பட 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் வாகனத்தை கடத்திய குடிகாரன் உட்பட 4 பேர் கைது..

யாழ்.கொடிகாமம் பகுதியில் பொலிஸாருடைய வாகனத்தை கடத்தி சென்ற குடிகாரன் உட்பட 4 பேர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று கச்சாய்- பாலாவி வீதியில் ரோந்து சென்ற பொலிஸாரை திசை திருப்பி அவர்களுடைய வாகனத்தை ந.கஜீபன் என்பவர் கடத்தி சென்றார். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை துரத்தி சென்று கைது செய்ய முயற்சித்தபோது வாகனத்தை விட்டு விட் டு பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பி சென்றிருந்தார். 

இந்நிலையில் குறித்த நகரை தொடர்ச்சியாக தேடிய கொடிகாமம் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்ததுடன் பொலிஸாரை திசை திருப்புவதற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் 3 போரை கைது செய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு