புதுக்குடியிருப்பு- கைவேலியில் வீடு புகுந்து வாள்வெட்டு, துப்பாக்கி சூடு, 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு- கைவேலியில் வீடு புகுந்து வாள்வெட்டு, துப்பாக்கி சூடு, 4 பேர் படுகாயம்..

புதுக்குடியிருப்பு- கைவேலி பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட் டு நடாத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது, 

(11.09.18) நேற்று  இரவு 11.00 மணியளவில் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வீடுபுகுந்த கும்பல் ஒன்று வாள்களுடன் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதுடன் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டத்தில்மேலும் ஒருவர் காயமடைந்து மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு