கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை பறித்துக் கொண்டு ஓடிய குடிகாரன்..

ஆசிரியர் - Editor I
கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை பறித்துக் கொண்டு ஓடிய குடிகாரன்..

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் பாலாவி வீதியில் இன்று மாலை 7.30 மணியளவில் பொலிஸாரின் வாகனத்தினை எடுத்துக் கொண்டு ஓடிய குடிகாரனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது,  கச்சாய் பாலாவி வீதியில் இன்று மாலை 7.30 மணியளவில் இரு கு ழுக்களுக்கிடையில் தர்க்கம் இடம்பெற்று ள்ளது.

இதனை அந்த வீதியால் ரோந்து சென்ற கொடிகாமம் பொலிஸார் அவதானித்த நிலையில் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி தர்க்கத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

இதன்போது அங்கு நிறை மதுபோதையில் இருந்த குடிகாரன் ஒருவன் பொலிஸாருடைய வாகனத்தை பறித்து எடுத்துக்கொண்டு  ஓடியுள்ளான். இதனையடுத்து வாகனத்தை துரத்தி சென்ற பொலிஸார் 

சிறிது தூரத்தில் மரத்துடன் மோதி நின்ற தமது வாகனத்தை மீட்டுள்ளனர். இதேவேளை வாகனத்தை பறித்து சென்றவனை கைது செய்ய முயன்றபோதும் பொலிஸாருடைய பிடியில் இருந்து அவன் தப்பி ஓடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த குடிகாரனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு