வடமராட்சி கடற்பரப்பில் 119 கிலோ கஞ்சாவுடன் 4 போ் கைது..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கடற்பரப்பில் 119 கிலோ கஞ்சாவுடன் 4 போ் கைது..

யாழில் 119 கிலோக்கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை, கடலில் சுற்றுக்காவலில் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்து சோதனை செய்தபோது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

அத்துடன் படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை, மன்னார் மற்றும் பாலாவியை சேர்ந்தவர்கள்   எனவும் , இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டகஞ்சாவை , கைமாற்றி எடுத்து வந்த போதே அவர்களை கடற்படையினர் கைது செய்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை , காரைநகரில் முச்சக்கர வண்டியில் கஞ்சா போதை பொருள் கடத்துவதாக யாழ். பொலிஸ் சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரின் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து ஒரு கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்டவரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் ஊர்காவற்துறை பொலிசாரிடம் நேற்று திங்கட்கிழமை தாம் ஒப்படைத்ததாக யாழ். பொலிஸ் சிறப்பு அதிரடி படையினர் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு