திருமண மண்டபத்தில் ஆட்டிறைச்சி உணவு உண்ட 3 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
திருமண மண்டபத்தில் ஆட்டிறைச்சி உணவு உண்ட 3 பேர் வைத்தியசாலையில்..

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி பழுதடைந்தமையினால் 3 பேர் யாழ்.போனதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருமண மண் டபத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக் கு தாக்கல் செய்யப்பட்டு உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவதது,

இன்றைய தினம் திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற திருமணத்தில் ஆட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட 3 பேர் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்திய உரும்பிராய் பொது சுகாதார பரிசோதகர் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்த பட்ட உருமையாளருக்கு எதிராக பழுதடை ந்த ஆட்டிறைச்சியை உணவில் சேர்த்தமை மற்றும் சுகாதார அனுமதி பெறாமல் உணவை கையாண்டமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிவான் வழக்கை ஒத் திவைத்து உரிமையாளரை பிணையில் வி டுவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு