இறால் கூட்டில் அகப்பட்டது அருகிவரும் உயிரினமான மீன் பூனை..

ஆசிரியர் - Editor I
இறால் கூட்டில் அகப்பட்டது அருகிவரும் உயிரினமான மீன் பூனை..

யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் இன்று காலை இறால் கூட்டுக்குள் அகப்பட்டிருந்த நிலையில் பிடிக்கப்பட்டது மீன் பூனை என அழைக்கப்படும் சிவப்பு பட்டியலில் உள்ள ஒரு உயிரினம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்றார். அவரது மீன் கூட்டை இழுத்துள்ளார். அதன் எடை கனமாக இருந்துள்ளது.

அதனை அவதானித்த போது, சிறுத்தைப் புலி போன்ற ஒன்று காணப்பட்டுள்ளது.  அதனை கரைக்கொண்டு வந்த மீனவர், சக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் அறிவித்தார்.

கடற்படையினரால் வன உயிரினங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வந்தபோது அது விசேடமாக ஆசிய நாடுகளில் வாழும் அருகிவரு ம் இனமாக சிவப்பு பட்டியலில் சேர்ப்பட்டுள்ள மீன் பூனை என அடையாளப்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு