கடலட்டை பிடிக்கவந்த வெளிமாவட்ட மீனவர்கள் ஹெறோயின் வியாபாரம்..

ஆசிரியர் - Editor I
கடலட்டை பிடிக்கவந்த வெளிமாவட்ட மீனவர்கள் ஹெறோயின் வியாபாரம்..

யாழில் ஹெறோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலட்டை பிடிக்கும் வெளிமாவட் ட மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை குறித்த இரு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெறோயின் போதை பொருளினை மீட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு