யாழ்.கல்வியங்காட்டில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அட்டகாசம்..

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் இன்று காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தந்தை, மகன் மற்றும் குடும்ப பெண் ஒருவரும் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்வம் குறித்து பொலிஸார் கூறியுள்ளதாவது, 

அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) செல்வராசா சஜீபன் (வயது 25) பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரும் இரகசிய பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு