வாள்களை காட்டி கொள்ளையிட முயற்சி, மயிரிழையில் தப்பிய நகைகடை உரிமையாளர்..

ஆசிரியர் - Editor I
வாள்களை காட்டி கொள்ளையிட முயற்சி, மயிரிழையில் தப்பிய நகைகடை உரிமையாளர்..

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவர் நேற்று மாலை கடையை பூட்டி வீடு செல்லும்போது வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் நகை கடை உரிமையாளரின் சாதுரியத்தினால்  தப்பித்தார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நகை கடை நடாத்தும் ஓர் உரிமையாளர் நேற்று பாலை சுமார் 5.30 மணியளவில் கடையை மூடிவிட்டு துவிச்சக்கர வண்டியில் கொக்குவிலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இவ்வாறு சென்றுகொண்டிருந்தவரை இரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர்கள் வாள் முனையில் மடக்கியுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்ந நகைக் கடை உரிமையாளரை வாள் முனையில் அச்சுறுத்தியபடி பணத்தினை எடுக்குமாறு கோரியுள்ளனர். இதன்போது பணத்தை எடுப்பதுபோல் பாசாங்கு செய்த கடை உரிமையாளர் துவிச்சக்கர வண்டியை தூக்கி வாளுடன் நின்றவர்மீது எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு தப்பியோடியவர் அருகில் இருந்த மரக்கடை ஒன்றிற்குள் தஞ்சமடைந்தார். அங்கே அதிக மக்கள் பிரசன்னம் இருந்தமையினை அவதானித்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 இளைஞர்கள் தப்பிச் சென்றதனால் நகை கடை உரிமையாளரின் பணமும் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்கச் சங்கிலி மோதிரம் என்பன தப்பியது. 

காங்கேசன்துறை பிரதான வீதியில் தட்டாதெருச் சந்திப் பகுதியில் பகல்வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றவேளையில் நல்லூர்க் கந்தன் ஆலயந்திற்குச் செல்லும் பக்கத்தர்கள் உட்பட ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ் வழியால் போக்குவரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு