மாங்குளம் வெடிவிபத்தில் மற்றய இளைஞனும் உயிரிழப்பு, சோகத்தில் நஞ்சருந்திய மனைவி..

ஆசிரியர் - Editor I
மாங்குளம் வெடிவிபத்தில் மற்றய இளைஞனும் உயிரிழப்பு, சோகத்தில் நஞ்சருந்திய மனைவி..

மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதே சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞனும் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது, 

மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடடிவக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த திங்கட்கிழமை மிதி வெடி வெடித்ததில் பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் (வயது 25) படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக மன விரக்தியடைந்த எஸ்.நிதர்சனின் மனைவி நி.சாரதா(வயது 22) நேற்று விஷம் குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு