கஞ்சா விற்பனை செய்த 5 இளைஞர்கள் புன்னாலைகட்டுவனில் கைது..

ஆசிரியர் - Editor I
கஞ்சா விற்பனை செய்த 5 இளைஞர்கள் புன்னாலைகட்டுவனில் கைது..

யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் ஐந்து இளைஞர்களை சுன்னாக பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களின் உடமையில் இருந்து ஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கைப்பற்றியதாக சுன்னாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

தமக்கு கிடைக்க ரகசிய தகவலின் அடிப்படையில் தாம் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதன் போது சந்தேக நபர்கள் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் இருந்த வேளை அவர்களை கைது செய்யததாகவும் , 

கைது செய்யபப்ட்டு உள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு