கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயில் மீது கல்வீச்சு..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயில் மீது கல்வீச்சு..

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். 

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த பா.சிவச்செல்வம் (வயது 64) என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , 

குருணாகலில் இருந்து யாழ்.நோக்கி வருவதற்காக புகையிரதத்தில் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மதவாச்சிக்கு அண்மித்த பகுதியில் புகையிரதம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் போதே அவர் கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

காயமடைந்த நபர் தற்போது அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு