கிளிநொச்சி பெண் படுகொலையின் பிரதான சந்தேகநபர் கைது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பெண் படுகொலையின் பிரதான சந்தேகநபர் கைது..

முல்லைத்தீவு கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார். 

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கையடக்க தொலைபேசி தொடர்புகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிசார் இறுதியாக அழைப்பெடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் தனியார் பாதுகாப்பு பிரிவு ஒன்றில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றார். படுகொலை செய்யபப்ட்ட கர்ப்பிணி பெண்ணும் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர். அந்நிலையில் அந்த பெண்ணின் தொலைபேசியில் இருந்து இறுதியாக குறித்த நபருக்கே அழைப்பு எடுக்கப்பட்டு இருக்கின்றது. 

அதன் அடிப்படையில் சந்தேகத்தில் அவரை விசாரணைக்கு அழைத்திருந்தோம். விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியதை அடுத்து சந்தேகத்தில் அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னேடுக்கின்றோம். என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின்னணி. 

முல்லைத்தீவு முறிகண்டி வசந்தநகரை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணியான கருப்பையா நித்தியகலா (வயது 32) எனும் குடும்ப பெண் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து கடந்த 29ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு