தீவகம் பிரதான வீதியில் பாரிய விபத்து..

ஆசிரியர் - Editor I
தீவகம் பிரதான வீதியில் பாரிய விபத்து..

யாழ்.தீவகத்திற்கான பிரதான வீதியில் இன்று  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவ ருவதாவது, 

இன்று வெள்ளிக்கிழமை காலை   தீவக பிரதான வீதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்று-மண்கும்பான் பிள்ளையார் கோவிலுக்கருகில் மின்சாரக் கம்பத்துடன் மோதியுள்ளது.

அதிகவேகமாகப் பயணித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்தில்சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

மின்கம்பத்தில் மோதியதால்,இப்பகுதிக்கான மின் விநியோகம் தற்காலிகமாக தடைபட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கடந்த ஒருவாரகாலத்தில் தீவக பிரதான வீதியில் பலவிபத்துக்கள் இடம்பெற்றதாக வாகன மக்கள் தெரிவிக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு