கிளிநொச்சி-பன்னங்கண்டியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி-பன்னங்கண்டியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது..

கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் இன்று கா லை சடலமாக மீட்கப்பட்ட பெண் திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளி.பன்னங்கண்டி பகுதியில் உள்ளாடை களுடன் பெண் ஒருவருடைய சடலம் இன்று கண் டுபிடிக்கப்பட்டது.

குறித்த சடலத்திற்கு அருகில் இடுப்பு பட்டி, பேனாக் கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த பெண் யார் என அடையா ளம் காணப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட இடுப்பு பட்டி மற்றும் பேனா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர் பெண் காவலாளியாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சில ஊடகவியலாளர்கள் சேர்ந்து தனியார் காவல் நிறுவனங்களை அணுகி விசா ரித்தபோது அறிவியல் நகர் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண் காவலாளி ஒருவரை காணவில்லை. 

என அறியப்பட்டு அவருடைய வீட்டுக்கு சென்று விசாரித்ததன் அடிப்படையில் காவலாளியாக கடமையாற்று ம் திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த கறுப்பையா நித்தியகலா(வயது32) என அடையாள ம் காணப்பட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு