பெண் தாதியின் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிய மனநோயாளியால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
பெண் தாதியின் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிய மனநோயாளியால் பரபரப்பு..

தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  மனநோயாளி ஒருவர் தாதியர் அறையினுள் ஓர் பெண் தாதி இருந்த நிலையில் உள்  நுழைந்து கதவினைப் பூட்டியதனால் நேற்றைய தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த  ஒருவர் தாதியர் அறையினுள் திடீரெனப் பிரவேசித்து அறையின் கதவினை உட்பக்கமாக தாள் இட்டுக்கொண்டார். 

இதன் காரணமாக அச்சம் அடைந்த தாதிய உத்தியோகத்தர் குரல் எழுப்பியமையினால் வெளியே இருந்த தாதிய உத்தியோகத்ணர்கள் உள்ளிட்டோர் பெரும் பதற்றமடைந்தனர்.

இதன் காரணமாக அறைக் கதவினை குறித்த நோயாளி திறக்காத நிலையில் தாதிய உத்தியோகத்தர் அச்சமடையும் நிலையில் இறுதியில் வெளியில் இருந்த உத்தியோகத்தர்கள் அறையின் கதவினை உடைத்து உட் சென்றனர். 

இதன் காரணமாக தாதிய உத்தியோகத்தர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதேநேரம் அண்மையில் ஓர் மதுவிற்கு அடிமையான நோயாளி ஒருவர் பெண்கள் விடுதிக்குள் உள் நுழைந்து பெண்நோயாளியை 

பிடித்தமையினால் நீண்ட போராட்டத்தின் பின்னர் நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு