கிளிநொச்சியில் கள்ள மாடு வெட்டியவர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் கள்ள மாடு வெட்டியவர்கள் கைது..

கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் திருட்டு தனமாக மாட்டை பிடித்து இறைச்சியாக்கிய திருடர்களை பிரதேச மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய குளம் கிராமத்தில் நேற்று இரவு வீட்டின் முன்னால் கட்டி விடப்பட்டிருந்த மாட்டை காணாது மாட்டின் உரிமையாளர் 

இன்று மாட்டை தேடிய போது உழவு இயந்திரத்தில் வந்து மாட்டின் கழிவுகளை இருவர் ஆட்கள் நடமாட்டம் அற்ற பிரதேசத்தில் கொட்டியதை ஒருவர் கண்டதை அடுத்து  

அந்த உழவுஇயந்திரத்திற்கு பின்னால் பிரதேச இளைஞர்கள் சென்று மாட்டை இறைச்சியாக்கி பங்கு போட்டுக்கொண்டிருந்த இருவர்களை  பிரதேச இளைஞர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போது ஒருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு