மாவீரன் பொன்.சிவகுமாரனின் 68வது பிறந்தநாள் அனுட்டிப்பு..

ஆசிரியர் - Editor I
மாவீரன் பொன்.சிவகுமாரனின் 68வது பிறந்தநாள் அனுட்டிப்பு..

தியாகி பொன் சிவகுமாரனின் 68 அவது பிறந்த தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பருத்தித்துறை வீதியின் உரும்பிராயில் அமைக்கப்பட்ட சிவகுமாரனின் நினைவுத் தூபியில் 

வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியகராசா நிரோஸ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது சிவகுமாரனின் சகோதரிகள் உறவினர்கள். மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 

பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐpலிங்கம், விந்தன் கனகரட்னம், 

சபா.குகதாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு