யாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள வடிகால்களுக்கு நெற்வேலி அமைக்க கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள வடிகால்களுக்கு நெற்வேலி அமைக்க கோரிக்கை..

யாழ்ப்பாணம் போதனா வைதியசாலையின் இருமருங்கிலும் வரும் வெள்ள வாய்க்கால்களிற்கு பாதுகாப்பு நெற்வேலி அமைப்பதற்கு மாநகர சபை அனுமதியளிக்க வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எழுத்தில் விண்ணப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சுத்தமாகவும் அழகாகவும் பெறும் வகையில் மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் வைத்தியசாலை அருகே காணப்படும் வெள்ள வாய்க்கால் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. 

குறித்த வாய்க்காலை மாநகர சபை சிறப்பாக பராமரிக்கின்றபோதும் தினமும் காற்றின் காரணமாக அங்கே சேரும் குப்பை கூழங்களைவிடவும் வெளியார் கொண்டு வந்து கொட்டும் குப்பைகளே அதிகமாகவும் காணப்படுகின்றது.

எனவே இவை இரண்டினையும் தடுக்கும் வகையிலும் வெள்ள வாய்க்கால் காலத்திற்கு காலம் சீர் செய்யும் வகையிலானதுமாக ஓர் பாதுகாப்பு நெற் வேலியை அமைக்க திட்டமிடுகின்றோம். 

எனவே அவ்வாறு திட்டமிடப்படும் மாதிரியை பரிசீலித்து அதனை அமைப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோருவதாகவே வைத்தியசாலைப் பணிப்பாளர் கோரியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு