இரா.சம்மந்தனை சந்திக்க கொழும்பில் காத்திருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்..

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தனை சந்திக்க கொழும்பில் காத்திருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்..

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டு கொழும்பில் காத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில்  சம்பந்தன் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் வடக்கு மாகாண சபையின் தற்போதை நிலமைகள் தொடர்பிலும் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பில் உரையாடும் வகையில் சந்தர்ப்பை ஏற்படுத்தும்  மேற்படி வேண்டுகை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பானது வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சரின் அலுவலகர் ஒருவரே தொடர்புகொண்டு குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார். 

இதன் பிரகாரம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை வரையில் முதலமைச்சர் பொழும்பிலேயே தங்கியுருப்பார் எனவும் அக் காலப்பகுதியில் கூட்டமைப்பின் தலைவரை சந்திக்க எண்ணுவதாகவும் நேரம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் குறித்த விடயத்தை தெரியப்படுத்திய நிலையில் தலைவரின் உரையாடலிற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு