உதவி செய்யபோனவர் 5 பவுண் சங்கிலியை பறிகொடுத்த பரிதாபம்..

ஆசிரியர் - Editor I
உதவி செய்யபோனவர் 5 பவுண் சங்கிலியை பறிகொடுத்த பரிதாபம்..

வீதியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவர் தனது ஐந்து பவுண் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். 

நுணாவில் மேற்கு மருதடி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சுப்பிரமணியம் துரைரத்தினம் (வயது 48) எனும் நபரே பாதிக்கப்பட்டு உள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 

மருதடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வீதியால் குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது JCB வாகனத்தில் 

சென்று கொண்டு இருந்த போது வீதி அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டு உள்ளது. 

அதனால் குறித்த நபர் நல்லெண்ணத்துடன் தனது வாகனத்தை விட்டு இறங்கி விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 

சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் தன்னுடன் பத்து பேரை அழைத்து வந்து , " எதற்காக மோட்டார் சைக்கிளை இடித்து விழுத்தி விட்டு வந்தாய் " என கேட்டு 

அவரை தாக்கியதுடன் , மோட்டார் சைக்கிளின் சேதத்தை திருத்த என அவரது ஐந்து பவுண் சங்கிலியையும் அறுத்து சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு