இதயத்தில் கிருமி தொற்று காரணமாக கல்வியற் கல்லூரி மாணவி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
இதயத்தில் கிருமி தொற்று காரணமாக கல்வியற் கல்லூரி மாணவி உயிரிழப்பு..

இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த கல்வியல் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த சிவலிங்கம் ஜிந்துஜா (வயது 23) எனும் மாணவியே உயிரிழந்தவராவார். 

அழுத்கம கல்வியல் கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வரும் மாணவி கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டு இருந்தனர். 

அந்நிலையில் திடீரென மாணவி சுகவீனமுற்றதை அடுத்து மாணவி வீட்டாரிடம் கல்வியல் கல்லூரி நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டார். 

அதனை அடுத்து மாணவியை வீட்டார் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நா. பிரேம்குமார் மாணவியின் இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழந்தார் என தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு