மானிதர் அமரர் ந.ரவிராஜின் திரு உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய சுகாதார அமைச்சர்...

ஆசிரியர் - Editor I
மானிதர் அமரர் ந.ரவிராஜின் திரு உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய சுகாதார அமைச்சர்...

யாழ்.மாவட்டத்திற்கு இன்று வருகைதந்த மத்திய சுகாதார அமைச்சர் றாஜித சேனாரத்ன சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள மாமனிதர் அமரர் ந.ரவிராஜின் திரு உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வைத்தியசாலை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள் வதற்காக இன்று யாழ்.வந்த அமைச்சர் இன்று மாலை சாவகச்சேரியில் வைத்தியசாலையில் இரத்த சுத்தீகரிப்பு நிலையத்தினை திறந்துவைத்தார். 

இதற்காக சாவகச்சேரிக்கு சென்ற சுகாதார அமைச்சர் அமரர் ரவிராஜ் தனது நெருங்கிய நண்பர் எனவும் அவருடைய திரு உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தவேண்டும் என கேட்டுள்ளார். இதற்கமைய அமரர் ரவிராஜின் திரு உருவ சிலை அமைந்துள்ள

இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அமைச்சர் மலர் அஞ்சலியை செலுத்திய பின்னரே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று இரத்த சுத்தீகரிப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 



 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு