யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் றாஜிதசேனாரத்ன..

ஆசிரியர் - Editor I
யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் றாஜிதசேனாரத்ன..

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த சுகாதரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருதாக்கள் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டித்திற்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்ததுடன் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து தாதியர் விடுதியினை திறந்து வைத்து தாதியர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.

இவருடன் பிரதி சுகாதரத்துறை அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாவைசேனாதிராசா, 

மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு