முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மீனவர் அத்துமீறலை கண்டித்தும் தடைசெய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்தகோரியும் மாவட்ட மீனவர்களால் நடாத்தப்பட்டு வந்த தொடர் போராட்டம் மத்திய கடற்றொழில் அமைச்சருடைய உறுதி மொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25பேருக்கு வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதியினை இரத்துசெய்யக்கோரியும் கடந்த 2ம்திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்பாக தொடர் கனயீரப்புப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்திஅமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா  முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் மீனவ அமைப்பினருடன் இணைந்து ஆராய்ந்ததன் பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்களைச் சந்தித்து தடைசெய்யப்பட்ட தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை 

எடுத்துள்ளதாகவும் சுருக்குவலை அனுமதித்தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அதுவரையில் சுருக்குவலை அனுமதி அனைத்தையும் தற்காலிகமாக இரத்துசெய்வதாகவும் வழங்கிய வாக்குறுதியையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு