வடமாகாணசபையில் ஆழுங்கட்சிக்குள் எதிர்கட்சி..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையில் ஆழுங்கட்சிக்குள் எதிர்கட்சி..

வடமாகாணசபையில் எதிர்கட்சி தேவையில்லை. காரணம் ஆழுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதாக கூறிய வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கின்றார். 

வடமாகாணசபையின் 129வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ந டைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து ஆழுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து கருத்துக்களை கூறிக்கொ ண்டிருந்தனர். இதனையடுத்து சபையில் பேசிய எதிர்கட்சி உறுப்பினர் அலிக்கான் செரிவ் எழுந்து இந்த அவையில் ஆழுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதனால் 

எதிர்கட்சியினராகிய நாங்கள் இந்த சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நாங்கள் இந்த சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம். என கூறினார். இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் 

சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும் 2 எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபையில் இருந்தனர். இதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இறுதியா ன தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். 

என கூறிய அவை தலைவர் அரசியலமைப்பின் உறுப்புரை 154 க5 ற்று அமைவாக அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆகியோரை 

கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு