உங்கள் நலன்களுக்காக சட்டம் பேசும் நீங்கள் மக்கள் நலனுக்காக பேசினீர்களா?

ஆசிரியர் - Editor I
உங்கள் நலன்களுக்காக சட்டம் பேசும் நீங்கள் மக்கள் நலனுக்காக பேசினீர்களா?

மாகாண அமைச்சர்கள் விடயத்தில் இந்தளவு சட்ட நுணுக்கங்களை பேசும் மாகாணசபை  உறுப்பினர்களாகவும் சட்டத்தரணிகளாகவும், சட்டம் தெரிந்தவர்களாகவும் உள்ள நீங்கள் மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தினீர்களா?

மேற்கண்டவாறு மாகாணசபை உறுப்பினர் வி.தவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வடமாகா ணசபையின் 129வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றி ருந்தது. இதன்போதே எதிர்கட்சி உறுப்பினர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். 

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், வடமாகாணசபை ஆழுங்கட்சிக்குள் இன்று உருவாகியிருக்கும் சகல குழப்பங்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர்களே காரணம். 

குறிப்பாக அவர்களே ஆட்களை நியமனம் செய்துவிட்டு அவர்களே விமர்சனம் செய்வதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த சொற்ப வரப்பிரசாதங்களை கொண்ட வடமாகாணசபையையும் 

போட்டுடைத்த பெருமையும் அவர்களை சாரும். இன்று மாகாண அமைச்சர்கள் விடயத்தில் பல சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசுகிறார்கள். அதேசமயம் இன்று வடக்கி ல் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. 

இன்று இந்த அவையில் அமைச்சர்கள் விடயம் குறித்து சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசும் சட்டத்தரணிகள் மக்களுடைய நலன்கள் சார்ந்து எதாவது பேசியிருக்கிறீர்களா? மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு பேசியிருந்தால், 

மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்று மக்கள் பல நன்மைகளை பெற்றிருப்பார்கள். இந்த அமைச்சர்கள் விடயம் தொடர்பாக பேசி ஒரு தீர்வினை பெற hமல் சபையை நடாத்தாதீர்கள். 

ஏற்கனவே பல லட்சம் பணத்தை செலவிட்டாயிற்று இனியும் அதனை செய்யாதீர்கள் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு