யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவுகளில் பிறந்தநாள் கொண்டாடும் வாள்வெட்டு குழு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவுகளில் பிறந்தநாள் கொண்டாடும் வாள்வெட்டு குழு..

யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் ஆவா குழு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக கூறியிருக்கும் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்,

தமது குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான கருவியாக இவ்வாறான பிறந்தநாள் கொ ண்டாட்டங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் சீர்குலைந்துள்ள நிலையில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

ஆவா குழு சுமார் 200ற்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்து யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு படகை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளனர்.

அந்த தீவில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆவா என அழைக்கப் படும் வாள்வெட்டு குழு பிரதான நபர் வருடத்தில் 3 தடவைகள் பிறந்தநாள்

கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொ ண்டாட்டங்கள் வாள்வெட்டு குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான கருவியாக பயன்படுத் தப்படுவதாகவும் கூறினார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு