நாடு எங்கே போகின்றது!! 14 வயது சிறுவனால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகம்.

ஆசிரியர் - Admin
நாடு எங்கே போகின்றது!! 14 வயது சிறுவனால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகம்.

13 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்வுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெல்லவாய குடாஓயா பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவி கடந்த 31 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு சென்ற மாணவனை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடக்கும் போது மாணவியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர் குடாஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவனை கைது செய்த பொலிஸார், வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மாணவனை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெல்லவாய சிறிபுரகம பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு