யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கட்டிடி தொகுதியை திறந்து வைத்தார் பிரதமர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கட்டிடி தொகுதியை திறந்து வைத்தார் பிரதமர்..

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பீட கட்டிட தொகுதியையும், உத்தியோகத்தர்கள் விடுதியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். 

இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்ப டி கட்டிட தொகுதியை திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில்

அரச நிதியில் இருந்து சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக  நிர்மானிக்கப்பட்டபத்துக்கட்டடங்களையும் உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள்

விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பவற்றை  இன்று திறந்துவைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன்,  சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், 

பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும விசேட அதிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு