ஊடகத்துறை சார் பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஆசிரியர் - Admin
ஊடகத்துறை சார் பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை

‘ஊடகப் பெண்கள் குழு’ வின் ஏற்பாட்டில் ஊடக நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்,ஊடகவியலாளர்களாகப் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிய விரும்பும் பெண்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(05.08.2018) காலை-09 மணி முதல் யாழில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் அன்றைய தினம் பிற்பகல்-04 மணி வரை இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சட்டத்தரணியும் ,தமிழறிஞருமான கலாநிதி- சந்திரிகா சுப்ரமணியன் பங்கு கொண்டு இலவசப் பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் நியூரங்கனாஸ் ஹோம் பில்டர்ஸ் மற்றும், மார்க்கம் கனடா நியூரங்கனாஸ் நகைமாடம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிப் பட்டறை தொடர்பான மேலதிக விபரங்களை ஊடகவியலாளர் யாழ்.தர்மினி பத்மநாதனின் 0776 544 158 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, இந்த நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த பெண்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு