தென்னியங்குளம் காட்டு பகுதியில் சிறுவனின் பாதணி மீட்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் இல்லை..

ஆசிரியர் - Editor I
தென்னியங்குளம் காட்டு பகுதியில் சிறுவனின் பாதணி மீட்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் இல்லை..

முல்லைத்தீவு- தென்னியங்குளம் காட்டு பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணிகள் கண் டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி பாதணிகள் புதையல் தோண்டுவதற்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவனுடையதாக இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கும் நிலையில், அ ந்த பகுதியில் சிறுவர்கள் காணாமல்போனதாக முறைப்பாடு கிடைக்கவில்லை என பொ லிஸார் கூறியுள்ளர். 

தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்கதென தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 8 அடி ஆழமான குழியொன்றும் வெட்டப்பட்டுஇ சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும் பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடயங்களையும் மல்லாவி பொலிசார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.

இந் நிலையிலேயே சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால் அந்த புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில்  கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம் அப் பகுதியிலிருந்து ஒருசோடி பாதணியொன்றை மீட்டோம். எனினும் அப் பகுதியில் சிறுவன் எவரும் காணாமல் போனதாக எமக்கு எவ்வித முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை.

அத்துடன் அப் பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு