படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ச.நிலக்‌ஷனின் 11ம் ஆண்டு நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ச.நிலக்‌ஷனின் 11ம் ஆண்டு நினைவேந்தல்..

படுகொலை செய்யப்பட்ட இளநிலை ஊடக வியலாளர் சகாதேவன் நிலக்‌ஷனின் 11ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று மாலை 4.30மணிக்கு இடம்பெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நினைவேந்தில் நிலக் ஷனின் தாயார், தந்தை, சகேதரன் மற்றும் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் கலந் து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.

சகாதேவன் நிலக்‌ஷன் 11வருடங்களுக்கு முன் கொக்குவில் பகுதில் உள்ள அவரது வீட்டில் வைத்து இராணும் மற்றும் இராணு வத்துடன் சேர்ந்தியங்கிய சிலரால் படுகொலை செய்யப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு