யாழ்.கோட்டையை இராணுவம் ஆக்கிரமிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டையை இராணுவம் ஆக்கிரமிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை..

யாழ் ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைதியனம் யாழ் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி  மஹேஸ் சேனநாயக்க யாழ்.ஒல்லாந்தர் கோட்டையினை சென்று பார்வையிட்டார் கோட்டையினை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்படடுவருவதுடன் அதற்கு எதிரக அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையிலேயே இராணுவத்தளபதி இன்றையதினம் கோட்டையினை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்த இராணுவத்தளபதி அவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

யாழ் மாவட்ட கட்டளை தளபி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியம் இந்த நிகழ்வில் இணைந்திருந்தார்.

இதைதொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இரணுவ தளபதி கோட்டையினை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்தார்.

யாழ் நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த இருபத்தைந்து வருடங்களிற்கும் மேலாக குறித்த அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிமுள்ளதொரு சாதரண நடவடிக்கை என்றும் குறிப்பிடடதுடன் எந்நேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி விரை மேலும் சொற்ப நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படடு வருவதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு