சவப் பெட்டி வாங்குவதற்கும் கூட பணமில்லை, மனதை உருக்கும் சிறுவனின் மரணம்..

ஆசிரியர் - Editor I
சவப் பெட்டி வாங்குவதற்கும் கூட பணமில்லை, மனதை உருக்கும் சிறுவனின் மரணம்..

கிளிநொச்சி முழங்காவில் - அன்புபுரம் கிராமத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதால் உயிரிழந்த சிறுவனின் மரண சடங்கை செய்ய வசதியில்லாமல் சிறுவனின் குடும்பம் நிற்கிறது.

முழங்காவில் அன்புபுரம் பகுதியில் 13வயது சிறுவ ன் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி உயிரழந்தான். அ ந்த சிறுவனின் குடும்பம் வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு 

வறுமைப்பட்ட குடும்பம். இன்று அந்த குடும்பம் தம து பிள்ளையின் உடலை வைப்பதற்கு பிரேத பெட்டி ஒன்றை வாங்க இயலாத நிலையில் நின்றபோது ஊர் மக்கள் அங்கிருந்த பலகைகளை கொண்டு பிரேதப் பெட்டி தயாரித்த சம்பவம் பார்ப்பவர் மனதை உலுக்கியதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

படங்கள் உதவி:- நிபோஜன்..



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு