வடமராட்சி கிழக்கில் 2வது தடவையாக படகு எரிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கில் 2வது தடவையாக படகு எரிப்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் மீனவர் ஒருவருக்கு சொந்தமான படகு விசமிகளா ல் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் 2வது நாசக hர சம்பவமாகும். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தாழையடி பகுதியை சேர்ந்த அருளப்பு மேரி றொபின் ஸன் என்பவருடைய படகு நேற்று இரவு விசமிகளால் எரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியிலும் இடம்பெற்றிருந்தது. 

இது குறித்து தாழையடி கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு தகவல் தருகை யில் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருந் து கடலட்டை பிடித்து வருகின்றார்கள். 

இவர்களை வெளியேற்றவேண்டும் எனக்கோரி தொடர்ச்சியாக எமது மீனவர்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டங்களை முன்னின்று நடாத்துபவர்கள் மீது தொடர்ச்சிய hக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. 

இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் நாம் முறைப்பாடு பதிவு செய்திருந்தோம். ஆயினும் பொலிஸார் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எதனையு ம் எடுக்கவில்லை என்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு