இலண்டனில் 12 நாட்டு நாடகக் கலைஞர்கள் சங்கமிக்கும் உலகத்தமிழ் நாடக விழா: யாழ்.தர்மினி பத்மநாதன்

ஆசிரியர் - Admin
இலண்டனில் 12 நாட்டு நாடகக் கலைஞர்கள் சங்கமிக்கும் உலகத்தமிழ் நாடக விழா: யாழ்.தர்மினி பத்மநாதன்

‘உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் புரட்டாதி மாதம்-06 ஆம் ,07 ஆம் திகதிகளில் உலகத்தமிழ் நாடக விழா இலண்டனில் சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தமிழர் கலை, கலாசார ஒன்றியத் தலைவர் எம் .அரியநாயகம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் 12 நாடுகளிலிருந்து 14 நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளதாக பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவித்துள்ளதாக இலங்கைக்கான ஒழுங்கமைப்பாளர் யாழ்.தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ் நாடக விழா தொடர்பில் இன்று சனிக்கிழமை[28.07.2018 ]முற்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் எதிர்வரும் புரட்டாதி மாதம் -06 ஆம் , 07 ஆம் திகதிகளில் உலகத் தமிழ் நாடக விழாவினை இலண்டனில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நாடக விழாவில் கடந்த 2016 ஆம் ஆண்டை விட இவ்வருடம் மிக புகழ் பெற்ற பல நாடுகளிலும் அறியப்பட்ட நாடக ஆசிரியர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக கடந்த முறை சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்ட நடிகர் நாசர் இம்முறை ஆற்றுகையாளராகப் பங்கு கொள்ளும் “ஓராள் அரங்கு” மிக விசேடமாக இடம்பெறவுள்ளது .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் ஆற்றுகையில் குழுவினர் பங்கு கொள்கின்றனர். மட்டக்களப்பிலிருந்து விமல்ராஜ் அழகய்யாவின் ஆற்றுகையும் அரங்கேறவுள்ளது . இலங்கையிலிருந்து இவ்விரு குழுவினரும் செல்லவுள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து முனைவர் பார்த்திபராஜாவின் நாடகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை கருஞ்சுழி ஆறுமுகம் மற்றும் கோபி ஆகியோரினதும் நாடகங்கள், சிங்கப்பூரிலிருந்து பல்வேறு ஆளுமை கொண்ட ஆனந்தக்கண்ணனின் நாடகம், யூ .எஸ்.ஏ இலிருந்து நம் கலை அமைப்பின் ஊடாக கஜேந்திரகுமாரின் ஆற்றுகை இலண்டனிலிருந்து சாம் பிரதீபனும் , எழுச்சி மிக்க நாடகங்களை தரும் புலவர் நல்லதம்பி சிவானந்தனின் நாடகம் ,ஜெர்மனியிலிருந்து ராதா சர்மாவின் நாட்டிய நாடகம் , ஜேர்மனியிலிருந்து தானாச் சேர்ந்த கூட்டம் மாணவர்களின் புதிய முயற்சியாக ஒரு நாடகம், டென்மார்க்கிலிருந்து சிவகலையின் நாடகம் ,aபிரான்சிலிருந்து ஜெ .எஸ் சேகரின் நாடகம் என்பன அரங்கேறவுள்ளன. அத்துடன் 12 நாடுகளிளிருந்து14 நாடகங்களும் அரங்கேறவுள்ளன.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமானது கடந்த 18 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கமாக பாரிய படைப்புக்களைப் பாரீஸ் ஜேர்மன் , இலண்டன் ஆகிய நாடுகளிலும் பல நாடகங்களை மேடையேற்றியதுடன் .கூத்திசை குறுந்தகடுகள் என்பவற்றையும் வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமும் அரங்கை வலுப்படுத்த வேண்டும், அரங்காளர்களை கௌரவிக்க வேண்டும், அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் . ஒருங்கிணைப்பதன் மூலம் தான் சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்கான களங்களை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் ” உடல் ” என்ற நாடக சஞ்சிகையினை கடந்த 18 ஆண்டுகளாக உருவாக்கியதுடன் நாடக விழாவினையும் நடாத்த ஆரம்பித்தது. . .

உடல் சஞ்சிகையானது ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாற்றை நிர்ணயிக்கிறது அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகின்றது” என்ற விருது வாக்கியத்துடன் உலகளாவிய ரீதியில் அரங்காளர்களிடம் போய்ச் சேர்ந்ததன் காரணமாக , அரங்காளர்கள், ஆற்றுகையாளர்கள், ஆர்வலர்களிடமிருந்து அதற்கான பாராட்டும் வந்து குவியத் தொடங்கின .

இதன் ஊடாக உலகளாவிய ரீதியில் அரங்காளர்களின் தொடர்பு வந்து சேர்ந்தன. உடல் சஞ்சிகை எழுத்து வடிவுடன் மட்டுமன்றி செயல் வடிவிலும் செய்வதற்கான நோக்கம் எழுந்தது.

காரணம் இன்றைய புலம் பெயர்ந்து வாழுகின்ற அரங்காளர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழ் நாடகக் கலைகளின் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தலாம். எமது கலைகளை வேராக எமது இளம் தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் அதனைக் கண்டு களிக்கவும் , உள் வாங்கவும் வேண்டும் .

வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயம் இளம் தலைமுறைகள் எமது கலைகளின் தொன்மையை வேராகக் கண்டு ஏனைய இனத்தவர்களும் தெரிந்து கொள்ள தமிழினத்தின் தொன்மையைத் தமிழகக் கலைகளின் தொன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் .

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நாடகக் கலையை வளர்ப்பதற்கான தேடலை வளர்க்க உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் .த்துடன் . . பிரான்ஸ் ஜெர்மனி நாட்டு கலைகளை எமது பிள்ளைகள் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும் . அப்படி கற்றுக் கொள்வதால் அவர்கள் மத்தியில் எமது கலைகழும் அவர்கள் மத்தியில் போய்ச் சேரவும் , தரம் காணவும் உதவும் என்ற காரணங்களை எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

உலகத் தரத்திற்குத் தமிழ் நாடகம் உண்டு என்று காட்டவும் , அவர்கள் அதனைப் பார்க்கவும் வேண்டும் எனவும் எங்களுடைய தொன்மையான கூத்து வடிவம் எம்மிடம் உண்டு அவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் உலகளாவிய நாடகவியலாளர்களை , நாடகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது .

இதன் அடிப்படையில் தான் உடல் சஞ்சிகை எழுத்து வடிவமாக இருந்து செயல் வடிவுக்கு மாறியது. இவ்வாறே 2016 இல் பாரிஸ் மாநகரில் முதலாவது உலக தமிழ் நாடக விழா நடைபெற்றது. .

முதலாவது பாரிஸ் நாடக விழா பெரும் வெற்றியையும் , இளையோர் மத்தியில் பெரும் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துத் தந்தது. அதற்கச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் நாசரின் உரையில் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர்.

அந்தளவுக்குப் பெரும் சிறப்பாக உலகம் கண்டிராத வகையில் பாரிஸ் மாநகரில் இடம்பெற்றது . நாம் என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தோமோ எமது நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக நடிகர் நாசரின் உரையும் இருந்தது .

எமது இளையோர் தமிழ் நாடகக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் .தொன்மையைப் பேண வேண்டும் அத்தோடு ஏனைய நாட்டுக் கலைகளையும் அறிய வேண்டும் எனவும் நாசர் கூறியிருந்தார்.எனவே, முதல் நாடக விழா தந்த வெற்றியும் தற்போதைய தேவையையும் அடிப்படையாக வைத்து உணர்ந்து விழாவைத் தொடர்ந்து நடாத்தவேண்டும் என்ற உந்து சக்தியால் இரண்டாவது உலகத் தமிழ் நாடக விழாவை இவ்வருடம் இலண்டனில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் ”உடல் ” சஞ்சிகை சார்ந்து செயற்படுகின்ற ஒருங்கிணைப்பாளர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஜேர்மனியிலிருந்து ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் , நயினை விஜயன், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி, யாழில் யாழ். தர்மினி , சுவிஸ் , இத்தாலி, டென்மார்க்கில் என உடல் சஞ்சிகையில் ஒருங்கிணைப்பாளர்கள் நாடக விழாவிலும் செயற்படுகின்றனர் . இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர். இவர்கள் நாடகம் சார்ந்து , விழா சார்ந்து பணி புரிகின்றனர்.

பிரான்ஸ் கலை கலாசார ஒன்றியத்தினர் லண்டன் மாநகரில் ஒரு குழுவை அமைத்துப் புதிய இணைப்பாளர்கள் இணைந்து செயற்படுகின்றனர். அரங்க விழாவில் பங்கு கொள்ளுதல் பொருட்டு நாடகங்கள் 30 நிமிடம் தான் இருக்க வேண்டும் என்பதும் . குழுவில் 7 பேர் மட்டும் உள்ளடக்க வேண்டும் என்பதும் கட்டாயம் .

ஏனெனில்,போக்குவரத்து,தங்குமிட வசதிகள் எமது பொருளாதார நிலைக்கு ஏற்ற மாதிரித் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு நாடகங்களும் .தமிழ்ச் சமூகம் சார்ந்த தமிழ் இனத்தின் விடுதலை சார்ந்து பயனுள்ள நாடகங்களை சமூகத்துக்குத் தேவையான நாடகங்களை சமகால பிரச்சினையைப் பாடுபொருளாகக் கொண்டு படைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இந்த நாடகங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏனெனில், எல்லோரும் சமூகம் சார்ந்த சிந்தனையாளர்கள். நாடகத் துறை சார்ந்த சிந்தனையாளர்கள் ,விரிவுரையாளர்கள் பொதுவாகவே அரங்க ஆற்றுகையாளர்கள் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள் .

இன்றைய காலத்தில் தமிழினம் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது . புலம்பெயர் தேசத்திலும் சரி, தாயகத்திலும் சரி, தமிழகமோ, ஈழமோ , ஐரோப்பிய நாடோ எங்கும் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தேடலுள்ளது . தமிழினத்துக்கான தேவையுள்ளது .பிரச்சினையுள்ளது. அவற்றைக் கண் கொண்டு பார்ப்பதாக ஒவ்வொரு படைப்புக்களும் இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை உண்டு .

உடல் சார்ந்து செயற்படுகின்ற ஒருங்கிணைப்பாளர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஜேர்மனியிலிருந்து ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் , நயினை விஜயன், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி, யாழில் யாழ். தர்மினி , சுவிஸ் , இத்தாலி, டென்மார்க்கில் என உடல் சஞ்சிகையில் ஒருங்கிணைப்பாளர்கள் நாடக விழாவிலும் செயற்படுகின்றனர் .

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர். இவர்கள் நாடகம் சார்ந்து , விழா சார்ந்து பணி புரிகின்றனர். பிரான்ஸ் கலை கலாசார ஒன்றியத்தினர் இலண்டன் மாநகரில் ஒரு குழுவை அமைத்துப் புதிய இணைப்பாளர்கள் இணைந்து செயற்படுகின்றனர்.

இதில் மிகவும் கடுமையான உழைப்புண்டு. இதனைத் தான் சவாலாகப் பார்க்கின்றேன் . ஏனெனில், ஒரு நாடகம் அரங்கேற்றுவது என்றால் பல சிரமமுண்டு. தற்போது 12 நாடுகளையும் நாடகங்களையும் ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு வசதிகள் என்பவற்றை செய்து முடிப்பது என்பது என்பது எமது அங்கத்தவர்களினதும் , உறுப்பினர்களினதும், ஆதரவாளர்களினதும் உழைப்பு. மிகவும் காத்திரமான உழைப்பு இதற்குத் தேவைப்படுகிறது. இதற்காக அர்ப்பணிக்கப் பலர் தயாராகவுள்ளனர் .

எல்லாவற்றையும் ஈடுகொடுக்கப் பொருளாதார நெருக்கடி உண்டு. பலரின் உதவிகள் கேட்டுள்ளோம் . எமது மக்களின் நம்பிக்கையில் சிறுதுளி பெரு வெள்ளம் என உதவுபவர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. தாயகத்திலிருந்து இலண்டனுக்கு பார்வையாளர்களாக வர விரும்புபவர்கள் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ள முடியும் எவருக்கும் தடை இல்லை .

வர விரும்புபவர்கள் கடிதம் மூலம் ஒன்றியத்திற்கு கோரிக்கை விடுத்தால் விசாவுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் . ஆனால், விசா மற்றும் போக்குவரத்து , தங்குமிடம் உட்பட நாடு திரும்பும் வரை அனைத்திலும் தாங்களே தங்களுக்கு பொறுப்பாக வேண்டும் .

மேலும் ‘உடல் ‘ சிறப்பு இதழுக்காக ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி முடிவடைந்து விட்டது .ஆயினும், பலர் ஆர்வத்துடன் கட்டுரைகள் அனுப்பியுள்ளனர் .பலரினது கட்டுரைகள் காத்திருப்பிலுள்ளது. தாயகத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை கல்வியாகவுள்ளது. பாடசாலைகளிலுள்ளது. ஆய்வு மாணவர்கள் உள்ளனர் .

எல்லோருக்கும் தற்போது வேலைப்பளுக்கள் அதனாலோ என்னவோ பலரிடமிருந்து கட்டுரைகள் தாமதிக்கின்றன. கட்டுரையாளர்களின் ஒத்துழைப்பே அவர்களின் கட்டுரைகள் சர்வதேச அங்கீகாரம் பெற உதவும் . விழாவுக்கான காலங்கள் நெருங்கத் தொடங்கி விட்டன. வேகமாக மிகச் சுருக்கமான குறுகிய நாளில் விரைவாக கட்டுரை அனுப்ப ஆர்வமுடையவர்கள் இருப்பின் அதற்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படும்

தாயகத்திலுள்ளவர்கள் சிறப்பு இதழுக்காக உங்கள் கட்டுரைகளை தாயக ஒருங்கமைப்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கோ jaaltharmini@mail.com  அல்லது oudalmozhi@gmail .com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப முடியும் .

மேலதிக தொடர்புகளுக்குப் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத் தலைவர் எம் .அரியநாயகம் 0033 617731192 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் அரங்க விழாவின் சிறப்பு இதழுக்கு கட்டுரை சமர்ப்பிக்க இயலாதவர்கள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் உடல் சஞ்சிகைக்கு ஆக்கங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு