மரண சடங்கில் வாக்குவாதம் வாள்வெட்டாக மாறியதில் 5 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கில் வாக்குவாதம் வாள்வெட்டாக மாறியதில் 5 பேர் படுகாயம்..

யாழ்.தென்மராட்சி- வரணி பகுதியில் மரண  சடங்கில் உருவான வாக்குவாதம் வாள்வெட்டாக மாறியதில் 5பேர் படுகாயமடை ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது, வரணி வடக்கு பகுதியில் இன்று இடம்பெற்ற மரண சடங்கில் இரு தரப்புக்களுக்கிடையில் வாக்குவாதம் இ டம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் ஒருவாறாக சமாளித்து மரணித்தவருடைய உடல் மயா னத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. மயா னத்திற்று கொண்டு செல்லப்பட்ட சடலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு

திரும்பி வரும் வழியில் மீளவும் இரு தரப்பு க்குமிடையில் வாக்குவாதம் மூண்டதுடன் இறுதியல் வாக்குவாதம் சண்டையாக மூ ண்டுள்ளது. இதன்போது இரு தரப்பும் வா ள்கள் , பொல்லுகளுடன் 15 நிமிடங்களுக்கும் மேல் வீதியில் நின்று சண்டையிட்டு ள்ளனர்.

இதில் ராஜ்மிலன்(வயது29), தங்கலிங்கம் (வயது45), சுரேஷ்குமார்(வயது 30), கஜன் (வயது 27), நவரட்ணம்(வயது50) என்ற 5 பேரே காயமடைந்த நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை யாழ். கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு