யாழ்.புங்கன்குளத்தில் விபத்து இருவர் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்கன்குளத்தில் விபத்து இருவர் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்..

யாழ்.புங்கங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவருடை ய நிலை கவலைக்கிடமென தெரிவிக்கப்ப டுகிறது.

பூம்புகார், அரியாலை, நாவற்குழி பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே விபத்திற்கு ள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவு அமைக்கப்படவில்லை. எனினும் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலித்தபோதும் குறித்த இளைஞர்கள் ரயில் கடவையை கடந்தபோது விபத்து சம்பவித்துள்ளது. 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு