வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் 13 இளைஞா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் 13 இளைஞா்கள் கைது..

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொ லிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தென்மராட்சி- எழுதுமட்டுவாள் பகுதியி ல் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போ து சாவகச்சேரியில் இருந்து 13பேர் கொண்ட வாள்வெட்டு குழு

“சாவா குழு” வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாளுக்கு சென்றுள்ளது. இதனை அறிந்த கொடிகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில் குறித்த வாள்வெட்டு குழு அங்கிருந்து தப்பி வடமராட்சி கிழக்கு பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் கிளிநொச்சி- பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியத ன் அடிப்படையில் பளை பொலிஸார் மேற்படி 13 இளைஞர்களையும் வடமராட்சி கிழக்கு மருதங் கேணி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டபோது குறித்த இளைஞர்களிடம் வாள்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆ யுதங்கள் இருந்த நிலையில் அவற்றையும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பளை பொ லிஸார் கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு