செம்மணி பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அழ்வுகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
செம்மணி பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அழ்வுகள் ஆரம்பம்..

யாழ்ப்பாணம் செம்மனி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.செம்மனி - நாயனர்மார்கட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஒர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன.

இவ் மனித எச்சங்கள் தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். 

இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணினையும் முழுமையாக பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இன்றைய தினம் காலை சம்பவ இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன், யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொரிஸார் ஆகியோர் முன்னிலையில் இவ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு