அத்துமீறலை தட்டிக்கேட்க சென்ற கிராமசேவகர் மீது கோர தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
அத்துமீறலை தட்டிக்கேட்க சென்ற கிராமசேவகர் மீது கோர தாக்குதல்..

நெடுங்கேணிப் பகுதியில் நேற்று முன் தினம்  குளத்திற்குரித்தான காணியை அடாத்தாகப்பிடித்து துப்பரவு செய்த நபர்களை நேரில் சென்று விசாரணை செய்த கிராம சேவகர் மீது கோரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காசிப்பிள்ளை - பிரதீபன் , வயது 37 என்னும் கிராம சேவகரே தாக்குதலிற்கு இலக்கான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடிங்கேணி ஒலுமடு கிராம சேவகர் பிரிவிற்கான கிராம சேவகரிற்கு நேற்று மதியம்  அப்பகுதியில் உள்ள குளத்தின் அலைகரைப் பிரதேசத்தினை அடாத்தாகப் பிடித்து சிலர் துப்பரவுப் பணியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம சேவகர் நேரில் சென்றுள்ளார்.

இதன்போது அப் பகுதியில் வவுனியா ஆசிகுளம் பகுதியில் இருந்து வருகைதந்த சிலர் கிராம சேவகர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தாக்குதலிற்கு இலக்கானவர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மெற்றுவருகின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு