1983ம் ஆண்டு யூலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..

ஆசிரியர் - Editor I
1983ம் ஆண்டு யூலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..

1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கறுப்பு ஜீலை எனக் கூறப்படும் இன்றைய நாளானது தமிழர்களின் மனங்களில் என்றும் மறவாத கறைபடிந்த நாளாகவே பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கறுப்பு ஜூலைலைப் படுகொலை இடம்பற்று இன்றைக்கு 35 வருடங்களைக் கடந்திருக்கின்றது. இந்நிலையிலையே அந்தப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அங்சலி செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்ற இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு