வங்கி கடன் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
வங்கி கடன் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..

யாழ்ப்பாணத்தில் வங்கி கடன் திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

வடக்கிற்கு இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து  வைத்திருக்கின்றார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் வங்கி இலங்கை வங்கி  பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்களில்  கடன் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேற்படி வங்கிகளுக்கு நேரடியாக இன்று சென்ற பிரதமர் இக்கடன் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்தும் யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

கடன் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் இந் நிழ்வுகளில் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உளுப்பினர்கள் அரச 

அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு