SuperTopAds

பார்லர் போகாமலேயே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளனுமா?

ஆசிரியர் - Admin
பார்லர் போகாமலேயே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளனுமா?

அழகு நிலையம் செல்லாமல் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள பொருட்களை வைத்து செய்ய வேண்டிய பேஸ் ஃபேக் செய்து அசத்தலாம். ஆனால் சப்பாத்தி மற்றும் பூரிக்கு நாம் பயன்படுத்தும் கோதுமை மாவை வைத்து அசத்தலாக பேஸ் ஃபேக் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 3 ஸ்பூன்

பசும்பால் - 1 ஸ்பூன்

தேன் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - சிறிதளவு

செய்முறை

பாத்திரம் ஒன்றில் கோதுமை மாவு, பசும்பால், தேன், மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இவற்றினை சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்.

முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக செய்து பின்பு, கண் பகுதியை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்ய வேண்டும்.

மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும். பத்து நிமிடம் காய வைத்துவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீரால் மென்மையாக கழுவவும்.

பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவினால் முகம் பொலிவாக இருக்கும்.