யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மழை பெய்தமையால், மழைக்கு ஒதுங்கி நின்ற போதே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.