வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஈழகேசரி பொன்னையா வீதி விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஈழகேசரி பொன்னையா வீதி விடுவிப்பு..

வலிகாமம் வடக்கு  கட்டுவன்-மல்லாகம்- சங்கானை வீதியுடன் குரும்பசிட்டி சந்திக்கு செல்லும்  ஈழகேசரி பொன்னையா வீதி   இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த  இன்றைய தினம் (20)  விடுவிக்கப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டில்  குரும்பசிட்டியில் தெற்கு பக்கமாகவுள்ள மக்களின்  காணிகள் விடுவிக்கும் போது இந்த வீதியும்   அதன் அருகில் உள்ள மக்களின் காணியும் விடுவிக்கப்படாது  விளையாட்டு மைதானமாக 

இராணுவத்தினர் கம்பிவேலி போட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் தனியார் காணியூடாக புதிய வீதி இராணுவத்தினர் அமைத்து   குரும்பசிட்டி வீதியுடன் தொடுத்திருந்தனர். 

தற்போது  குரும்பசிட்டி பொன்பரமானந்தா வீத்தியாலய வீதியிலிருந்து குரும்பசிட்டி சந்தியூடாக வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் இராணுவ முகாமுக்குள் உள்ள இவ்வீதியை விடுவிக்குமாறு 

வலி.வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் இராணுவமுகாம் அதிகாரிக்கு வீதியை விடுவிக்குமாறு கோரப்பட்ட நிலையில் இவ்வீதியும் அதனுடன் எடுக்கப்பட்ட மக்களின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு