தோல்வி கண்டது இந்தியா!

ஆசிரியர் - Editor II
தோல்வி கண்டது இந்தியா!

13 வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெறுகிறது.

2 வது நாளான நேற்று (19) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3 வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார்.

யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

மேலும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2 வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன்

11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார்.

இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2 வது சுற்றுக்கு முன்னேறவில்லை. இப்போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு