யாழ்.நகருக்குள் பெண்ணின் பணப்பையை திருடிக் கொண்டு ஓடிய திருடன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகருக்குள் பெண்ணின் பணப்பையை திருடிக் கொண்டு ஓடிய திருடன்..

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய யுவதியின் பணப்பையை பறித்த இளைஞரை குறித்த யுவதி துரத்திச் சென்றபோதும் பொதுமக்கள ஒத்துழைக்கா மையினால் அவன்  ஓடி தப்பியுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ ருவதாவது,  மானிப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றுக்காலை 8 மணியளவில் பயணித்த பேரூந்தில் பயணித்த யுவதி ஒருவர் 

ஐந்து சந்திப் பகுதியில் இறங்கியுள்ளார். இதன்போது அப் பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் பணப்பையை பறித்து அதிலிருந்த பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துவிட்டு ஓடியுள்ளார்.

இதனையடுத்து பணப்பையை இழந்த யுவதி மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் வழிப்பறி இளைஞனை விரட்டிய சமயம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக கஸ்தூரியார் வீதியை அடைந்தவேளையில் 

வழிப்பறி இளைஞன் முன்பாக மோட்டார் சயிக்கிளில் வழி மறித்த யுவதி வீதி வழியாக சென்றவர்கள் முன்பு இளைஞனை இனம்காட்டி பிடிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்போது அங்கி நின்ற இளைஞர் ஒருவர். வழிப்பறியில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடிக்க முயன்ற சமயம் கிட்ட நெருங்கினால் கத்தியால் குத்துவேன் எனக் கூறி வழிப்பறி இளைஞன் மீண்டும் தப்பிச் சென்றுள்ளான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு